Kallakurichi Thunder Attack | கண்ணிமைக்கும் நொடியில் தாக்கிய இடி - தீப்பற்றி எரிந்த மூங்கில் மரம்
Kallakurichi Thunder Attack | கண்ணிமைக்கும் நொடியில் தாக்கிய இடி - தீப்பற்றி எரிந்த மூங்கில் மரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் இடி தாக்கியதில், மூங்கில் மரம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் பகுதிகளில், தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில், சங்கராபுரம் அடுத்த பிரம்மகுண்டம் கிராமத்தில் அம்மன் கோவில் அருகே உள்ள மூங்கில் மரத்தில் இடி தாக்கியது. இதனால் மரம் முழுவதும் சட சடவென தீப்பற்றி எரிந்தது.