விட்டு விட்டு பெய்யும் மழை - பெரும் சிரமத்தில் சென்னை மக்கள்

Update: 2024-01-08 10:33 GMT

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், சேப்பாக்கம், மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, அண்ணாசாலை பகுதிகளிலும், அதேபோல நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் அவதி அடைந்த நிலையில், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்