``கோர்ட் சொல்லியும் கேட்காமல் லஞ்சம் கேட்டு வீடு இடிப்பு'' - பரபரப்பு புகார்

Update: 2025-06-18 05:52 GMT

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் லஞ்சம் தர மறுத்ததற்காக குடியிருப்பு கட்டடத்தை நகர்ப்புற வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் இடித்ததாக புகார் எழுந்துள்ளது. இத்துடன் 50 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து, அதன் அருகிலுள்ள கட்டடத்தில் ஒன்றரை அடி ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி, அதிகாரிகள் கட்டடத்தை இடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்