திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்பெண்ணாத்தூர், செங்கம், ஜவ்வாது மலை, வந்தவாசி ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.