ரோடு போடுவதில் ஏற்பட்ட தகராறு.. கைகலப்பாக மாறியதால் பரபரப்பு.. "தோண்டி போட்டு 8 மாசம் ஆச்சு"

Update: 2024-03-05 12:06 GMT

கடலூரில் தரமற்ற சாலை போடப்படுவதாக தட்டிக்கேட்ட பொதுமக்களுடன் ஒப்பந்ததாரர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மிராளூர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்து வருகிறது. ஆனால் சாலை தரமற்று இருப்பதாக பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் குற்றம் சாட்டினர்... திமுக ஒன்றிய செயலாளர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்... தரமான சாலை அமைக்காவிட்டால் பணியை உடனடியாக நிறுத்துமாறு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பானதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்