சென்னை சவுகார்பேட்டையில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ணங்களின் விழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சென்னை சவுகார்பேட்டையில் குவிந்த ஏராளமானோர், ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசி ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.