கட்டிட கழிவுகள் அகற்றம் - ரூ.39.30 லட்சம் அபராதம் வசூல்
பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டிட இடிபாட்டுக் கழிவுகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து 39.30 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில், கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியில் தீவிர கட்டிட கழிவுகள் அகற்றும் பணி கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் 7 மண்டலங்களிலும், 17 தேதி முதல் 15 மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.