ரயில் நிலைய வாசலில் திடீரென தீப்பிடித்து எரிந்த இ-பைக்.. பதறியடித்து ஓடிய பயணிகள்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு

Update: 2025-01-22 09:31 GMT

ராமநாதபுரம் ரயில் நிலைய வாசலில் நிறுத்தி வைத்திருந்த பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முகமது சித்திக் என்பவர் தனது மகனை அழைத்துச் செல்ல வந்திருந்த போது, ரயில் நிலைய வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது இ-பைக் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் பதறி அடித்து ஓடினர். அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு ஸ்கூட்டரும் தீப்பிடித்து எரிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்