போனில் தரக்குறைவாக பேசிய வங்கி ஊழியர் - பெண் எடுத்த அதிரடி மூவ்

Update: 2024-05-01 10:57 GMT

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்பவர், குளிர்சாதனப் பெட்டி வாங்குவதற்காக, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் வங்கியில் 42 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 8 தவணைகளில், 6 தவணைக்கான பணத்தை ஆர்த்தி திருப்பிச் செலுத்தியதாக கூறப்படுகிறது. அடுத்த தவணை பணத்தைக் கட்ட 5 நாட்கள் தாமதமானதால், தனியார் வங்கி ஊழியர்கள் செல்போனில் அவரிடம் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்