பற்ற வைத்ததும் வெடித்து சிதறிய சிலிண்டர். நொடி பொழுதில் உயிர் தப்பிய குடும்பம்.

Update: 2024-01-02 11:40 GMT

சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி, பாலுதாங்கரை பகுதியில் வசிக்கும் தமிழ் இலக்கியா என்பவர், வழக்கம்போல் காலையில் உணவு தயாரிக்க, வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது ரெகுலேட்டரில் தீப்பற்றியது. சாக்கை எடுத்து தீயை அணைக்க முயன்றபோது தீ அதிகம் பரவியது. இதையடுத்து, தமிழ் இலக்கியா, அவரது மகன், மாமனார், மாமியார் ஆகியோர், வீட்டைவிட்டு அவசரமாக வெளியேறினர். சிறிது நேரத்தில் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. தீ வேகமாகப் பரவியதால் வீடு தீக்கிரையானதுடன், 5 சவரன் நகைகள், 20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கேஸ் சிலிண்டர் வெடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்