1000 ஆண்டு பழமை மிகு கோயில் திருவிழா.. இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் மரியாதை
நாகநாதர் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் தரிசனம்
நாகூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருத்தேரில் எழுந்தருளிய விநாயகர், முருகன் , அம்மன் மற்றும் தியாகராஜர் சுவாமிகளுக்கு பூஜை செய்த பின் திரளான பக்தர்கள் தேரினை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே தேரோட்டத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்களுக்கு, இந்துக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.