மத்திய அரசுக்கு வைகோ வைத்த முக்கிய கோரிக்கை | Vaiko

Update: 2024-02-05 13:21 GMT

தமிழ்நாட்டிற்கு மழை வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மதிமுக எம்.பி வைகோ கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது உரையாற்றிய வைகோ, தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் கோரினார் என்றும், பேரிடர் காரணமாக மக்கள் தற்போதும் துயரத்தை அனுபவித்து வருவதால், நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்