மருத்துவக் கல்லூரி மாணவர் கடத்தல் - ரவுடிகள் மூவர் கைது

Update: 2024-05-10 00:42 GMT

சென்னை, சூளைமேட்டை சேர்ந்தவர் நவீன்குமார். பல் மருத்துவ கல்லூரி மாணவரான இவர், யூட்யூப் சேனல் ஒன்று நடத்தி வரும் நிலையில், சென்னை செனாய் நகரை சேர்ந்த கோபிநாத் என்ற ரவுடியுடன் நவீன்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோபிநாத் நல்ல உடற்கட்டுடன் பாடிபில்டர் போல் இருந்ததால், அவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறிய நவீன்குமார், கோபிநாத் மற்றும் அவரின் நண்பரிடம் இருந்து சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த கோபிநாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து நவீன்குமாரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, நவீன்குமாரின் தாயாரை செல்போனில் அழைத்து கும்பல் பணம் கேட்ட நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனிடையே போலீசார் தங்களை தேடுவதை அறிந்த கோபிநாத், நவீன்குமாருடன் சேர்ந்து சென்னை கூளைமேடு காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், கோபிநாத் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்