B.P. ஜெயின் மருத்துவமனைக்கு சீல் வைக்க உத்தரவு

Update: 2024-05-09 04:32 GMT

புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், உடல் பருமன் சிகிச்சைக்காக சென்னை, பம்மலில் உள்ள B.P. ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இளைஞருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட B.P. ஜெயின் மருத்துவமனையில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறையினர், மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததை சுட்டிக்காட்டி மருத்துவமனைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், மருத்துவமனையில் போதுமான டெக்னீசியன்கள் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இல்லை எனவும், சிகிச்சைக்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் முறையாக மேற்கொள்ளப்பட வில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவமனையை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் உள்நோயாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவமனைக்குள் அனுமதி கிடையாது என மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு பலைகை வைக்கப்பட்டுள்ளது நோயாளிகள் குழப்பமடைய செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்