ஹரியானா மாநிலம் குருகிராமில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். வணிக வளாகத்தின் மேல் தளம் வரை தீ பரவியதால், இந்த விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.