குஜராத் மாநிலம், வதோதராவில் உணவு டெலிவரி ஊழியர் போல் சென்று முதியவரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வதோதராவில் உள்ள அகோடா பகுதியில், வீட்டில் தனியாக வசிக்கும் முதியவரை, உணவு பார்சல் வந்திருப்பதாக கூறி அருகில் அழைத்த நபர், அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுள்ளார். அந்த பகுதியில் முன்பே நோட்டமிட்ட அந்த நபர், உணவு செலிவரி ஊழியர் போல் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.