வெடித்து சிதறிய தொழிற்சாலையின் பிரமாண்ட பாய்லர்...எரிந்து கருகிய உடல்கள்... அதிரவைத்த மரண ஓலம்

Update: 2024-05-24 03:00 GMT

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் ரசாயனத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த‌தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோம்பிவிலியில் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. தீ விபத்து காரணமாக ஆலையின் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல்கள் சிதறியதோடு, கார் ஷோ ரூம் உட்பட 2 கட்ட‌டங்களுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து, 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், விபத்துக்கு காரணமான 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, விபத்து நடந்த போது, பணியாளர்கள் தப்பித்து ஓடும் காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்