சாலையில் மின்னலாய் பாய்ந்த பைக்...தட்டிக்கேட்ட போலீசை சரமாரியாக அடித்த இளைஞர்கள் -பரபரப்பு காட்சிகள்

Update: 2024-04-02 02:22 GMT

கன்னியாகுமரியில், சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததை தட்டிக்கேட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை, சரமாரியாக தாக்கிய 2 பேரை, போலீசார் கைது செய்தனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெயபால் என்பவரை தாக்கியதுடன், அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றது. இந்த சம்பவத்தில், ஆனந்த், அவரது நண்பர் பிரவீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கும் வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்