"சென்னையில் மத்திய அரசை வம்பிழுக்கும் பேனர்".. மர்ம நபர் செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு

Update: 2024-02-10 13:19 GMT

கோயம்பேடு மேம்பாலம் அருகே, தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு தொடர்பான பேனரை ஒருவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு வரியாக 1 ரூபாய் செலுத்தினால் 26 பைசா மட்டுமே திரும்ப தரப்படுவதாக, மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், கோயம்பேடு மேம்பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை, மர்மநபர் ஒருவர் கிழித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்