"உலகக்கோப்பை கனவு தகர்ந்துவிட்டது" - விரக்தியின் உச்சிக்கே சென்ற ரொனால்டோ

Update: 2022-12-12 08:41 GMT

கால்பந்து உலகக்கோப்பை கனவு தகர்ந்துவிட்டதாக போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ வேதனை தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், 5 முறை உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று, போர்ச்சுகல் அணிக்காக தன்னால் இயன்ற அளவு பங்காற்றியதாக கூறி உள்ளார்.

போர்ச்சுகல் அணி மீதான அர்ப்பணிப்பு சிறிதளவும் மாறவில்லை என்றும், அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், தனது பதிவில் ரொனால்டோ குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்