திருமணம் செய்வதாக ஆசை காட்டி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம்... - சிக்கிய தில்லாலங்கடி மாப்பிளை

Update: 2022-12-25 13:10 GMT

சாத்தூா் அருகே உள்ள வல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஜான்சிராணிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்ட நிலையில், 2-வது திருமணத்திற்கு தகவல் மையத்தில் பதிவு செய்து உள்ளார். இதனையடுத்து, ஒரு சில நாட்களில் பரமக்குடியைச் சோ்ந்த காா்த்திக் ஆரோக்கியராஜ், ஜான்சி ராணியை தொடர்பு கொண்டு, தங்களை இரண்டாவதாக திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாக கூறி உள்ளார். தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில், ஜான்சிராணியிடம் இருந்து 5 சவரன் நகையை வாங்கி சென்ற காா்த்திக் ஆரோக்கியராஜ், தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜான்சிராணி ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகாா்அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், காா்த்திக் ஆரோக்கியராஜ் ஏற்கனவே 20க்கு மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி,100 சவரன் நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்-கார்த்திக் ஆரோக்கியராஜ்

Tags:    

மேலும் செய்திகள்