டாஸ்மாக் கடையை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு - கம்யூ.கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Update: 2022-12-22 04:20 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வாகைகுளம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக டாஸ்மாக் கடையொன்று திறக்கப்பட்டது. இதற்கு, அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், டாஸ்மாக் கடை செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்