பல்லடத்தில் டவுசர் கொள்ளையர்கள்..பரபரப்பை ஏற்படுத்தும் CCTV காட்சி

Update: 2023-05-17 01:46 GMT

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இரவு நேரத்தில் முகமூடி அணிந்தபடி பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நடமாடுவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள சின்னையா கார்டன் பகுதியில் நேற்று நள்ளிரவு, முகமூடி அணிந்து அரைக்கால் டவுசருடன் கையில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர், ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு சென்றனர். இதனால் பீதி அடைந்துள்ள அப்பகுதி மக்கள், போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மர்ம நபர்கள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்