மரம் முறிந்து விழுந்து நிழற்குடை சேதம்.உயிர் தப்பிய பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோயில் அருகே பரபரப்பு

Update: 2023-06-28 03:01 GMT

மதுரையில் வீசிய பலத்த காற்றால் மீனாட்சி அம்மன் கோயில் அருகே இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது. மதுரை மாநகர் பகுதி முழுவதில் மாலை முதல் பலத்த காற்று வீசி வந்தது. இதில், மீனாட்சியம்மன் கோயில் அருகே இந்த பழமையான வேப்பமரம் திடிரென முறிந்து, அங்கிருந்த நிழற்குடை மீது விழுந்தது. அதிர்ஷ்டசவசமாக நிழற்குடையின் கீழ் இருந்த பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்