திருநங்கைகள் - இளைஞர்கள் இடையே தகராறு - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

Update: 2022-10-07 05:55 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, திருநங்கைகளை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, காவல் நிலையத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டனர். வளத்தூர் பகுதியில் திருநங்கை கலையரசி என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, அனுஷ்கா என்ற திருநங்கையை இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய கோரி, மேல்பட்டி காவல் நிலையத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்