நடைபாதையால் நடந்த விபரீதம் - மாமனார், மருமகனை கைது செய்த போலீஸ்

Update: 2022-12-21 02:30 GMT

ஈரோடு அருகே நடைபாதை பிரச்சினையில் மாமனார் மற்றும் மருமகனை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவரது வீட்டிற்கு செல்லும் நடைபாதையில் இந்திராணியின் உறவினரான ஜெயம்மாள் மற்றும் அவரது கணவர் ஜெயமுருகன் ஆகியோர் பாதையில் நடக்க முடியாதவாறு மண் கொட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக உறவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்திராணியை, ஜெயம்மாள் , அவரது கணவர் ஜெயமுருகன், மகள் பரமேஸ்வரி மற்றும் மருமகன் நந்தகுமார் ஆகிய நான்கு பேரும் கூட்டாக சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில் பலத்த காயம் அடைந்த இந்திராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக இந்திராணி அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயமுருகன் மற்றும் அவரது மருமகன் நந்தகுமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்த போலீசார், தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்