Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-05-2023) | Morning Headlines | Thanthi TV
கர்நாடகாவில் 224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன....36 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், உச்சக்கட்ட பாதுகாப்பு....
கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது பிற்பகலுக்குள் தெரியவரும்....வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.... சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு....
வாக்கு எண்ணிக்கையையொட்டி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு....காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிப்பு...
தேர்தலில், ஆளுங்கட்சி வெற்றி பெறாது என்ற எழுதப்படாத விதியை உடைப்போம்...கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக 113-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை....
கர்நாடக தேர்தலில் ஆபரேஷன் கமலாவுக்கு தயாராகும் பாஜக...வெற்றி பெறும் எம்எல்ஏக்களை தக்க வைக்க காங்கிரஸ் புது வியூகம்....யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு...
அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்...முதலமைச்சரின் தனி செயலாளர் உட்பட முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றப்படலாம் என எதிர்ப்பார்ப்பு... ..
சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு....இரண்டில் எது மூத்த மொழி என்பது கேள்விக்குறி தான் என்றும், சூசகம்....
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்....காணொலி மூலம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவிப்பு...
மத்திய வங்கக் கடல் பகுதியில் அதி தீவிர புயலாக வலுப்பெற்றது, மோக்கா....நாளை மியான்மர்- வங்கதேசம் இடையை கரையை கடக்கும் என கணிப்பு....
ஒடிசாவில் அமைச்சரவைவை மாற்றியமைக்க முதலமைச்சர் நவீன் பட்நாயக் முடிவு...சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு.....
சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் ஊதிய உயர்வு.....2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் முன்கூட்டியே ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அதிரடி....
துபாய், கொழும்புவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 23 கிலோ தங்கம் பறிமுதல்....இலங்கை இளைஞர் உள்பட 2 பேரை கைது மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடி....
கிருஷ்ணகிரியில் சட்டவிரோத குவாரிகளுக்கு 321 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் 20 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டதாக ஆட்சியர் அறிக்கை....தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி, 2 வாரங்களில் வசூலிக்க உத்தரவு...
விக்கிரவாண்டி அருகே 17 வயது கர்ப்பிணியை கொன்று புதைத்த காதலன் போக்சோவில் கைது....திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தீர்க்கட்டியதாக அதிர்ச்சித் தகவல்....
கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக் சைஃபிக்கு 27ம் தேதி வரை நீதிமன்றக் காவல்...கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு...
பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு புகாரை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட பயனாளிகள் வீடுகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு...சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நடவடிக்கை...
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து வரும் 15-ம் தேதி விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்...விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு...
பருத்திவீரன் பட நடிகர் சரவணன் மீது அவரது மனைவி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்...வீட்டிலிருந்து வெளியேறுமாறு அடியாட்களுடன் வந்து மிரட்டுவதாக குற்றச்சாட்டு...
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு...வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ரேவா சுந்தரேசன் ராஜ், தமிழக அளவில் முதலிடம்...
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி...வரும் 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளதாக கோட்டாட்சியர் ராஜா அறிவிப்பு..
உதகை அரசு ரோஜா பூங்காவில் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது ரோஜா கண்காட்சி ...பல வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு, பல்வேறு வடிவங்களை உருவாக்கும் பணிகள் தீவிரம்...
கேரளாவில் போதை ஆசிரியரால் பெண் மருத்துவர் குத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரம்..ஹவுஸ் சர்ஜன், முதுகலை மருத்துவ மாணவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்...
அக்னி வீரா்களுக்கு ரயில்வேயில் அலுவலா் அல்லாத பணியிடங்களில் இடஒதுக்கீடு அளிக்க இந்திய ரயில்வே முடிவு...உடல் தகுதித் திறன் தோ்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தகவல்...
மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்...1962 என்ற எண்ணை டயல் செய்தால் ஆம்புலன்ஸ் வரும் என அறிவிப்பு...
ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சாதா, நடிகை பரினீதி சோப்ராவுக்கு இன்று நிச்சயதார்த்தம்....டெல்லி உள்ள எம்பி.,யின் அரசு இல்லத்தில் வண்ணமயமான ஏற்பாடு...