இன்னும் 15 நாட்களில் நிச்சயதார்த்தம்... மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த காவலர் - திருவாரூரில் அதிர்ச்சி

Update: 2023-06-12 03:15 GMT

நாகையை சேர்ந்த சந்தான பிரவின்குமார் என்பவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா காவல் நிலையத்தில், கடந்த 2 ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வருகிறார். நாலானல்லூர் கிராமத்தில் உள்ள வயல்வெளியில், பிரவீன்குமார் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வரும் 28ம் தேதி, பிரவீன்குமாருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில், தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம், காவலர் மத்தியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்