மனமுருகி திருமந்திரம் பாடிய ஓதுவார்.. அமைதியாக நின்று கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2023-01-21 09:43 GMT

Full View


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 24 பேருக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டிற்கு 2 கோடியே 72 லட்சம் ரூபாய் நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில், அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பழனியிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், முருகன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்...முதல்வர் ஸ்டாலின் தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கும் இந்நிகழ்வின் துவக்கத்தில் ஓதுவாரால் திருமந்திரம் பாடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்