"அதைவிட பெரிய அவமானம் எதுவுமில்லை" - கொதித்தெழுந்த வழக்கறிஞர்கள்

Update: 2023-07-25 05:09 GMT

நீதிமன்றங்களில் சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றும்படி வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றம் அகற்றினால், நீதிமன்றத்துக்கு அதைவிட பெரிய அவமானம் வேறு எதுவுமில்லை என்று மூத்த வழக்கறிஞர்கள் விஜயகுமார், அருள்மொழி ஆகியோர் கூறினார்கள். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர், அவர்கள் உயர்நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்