அண்ணனை ஓட ஓட விரட்டி வெட்டிய தம்பி - 2வது தாரத்தின் மகன் வெறிச்செயல்

Update: 2023-06-20 08:19 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொத்து தகராறு காரணமாக அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர். சேத்தூரை சேர்ந்த முருகன் என்பவருக்கும், அவரது தந்தையின் இரண்டாவது தாரத்துக்கு பிறந்த மகன்களுக்குமிடையே, பூர்விக சொத்துக்களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துகொண்டிருந்த முருகனை, அவரது சகோதரர் ஞானகுருசாமி அரிவாளால் வெட்டி தப்பி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தப்பியோடிய ஞானகுருசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்