ஓடும் ரயிலில் அலறிய பெண்..போதையில் அத்துமீறிய CRPF வீரர்

Update: 2023-05-03 02:25 GMT


கர்நாடகாவில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், அந்தப் பெண் பயணம் செய்தார். ரயில் ஜோலார்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, அருகில் மது போதையில் அமர்ந்திருந்த சிஆர்பிஎப் வீரர் சுரேஷ் என்பவர், அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், டிக்கெட் பரிசோதகருக்கு கொடுத்த புகாரின்பேரில், சுரேஷை காட்பாடி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், சுரேஷ், வாணியம்பாடி அடுத்த ஓடியப்பண்ணை நகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், சுரேஷை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்