ஐயோ...நான் பிடிக்கலடா... வெள்ளத்தில் சறுக்கி சென்ற மகன் பின்னாடியே போன தந்தை - பரபரப்பு காட்சி

Update: 2022-08-07 05:50 GMT

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையால், ஏரி நிரம்பி வழிந்த நிலையில் அதில் குளித்த தந்தை மகன் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். துமகூரு மாவட்டத்தில் கெரே குடி கிராமத்தில் கொள்ளூ ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் தந்தை மகன், குளித்த படி விளையாடிக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து, அங்கிருந்த கிராம மக்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்