பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய நபர்...சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ
விழுப்புரம் மாவட்டம் வானுாரில், பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை, சமூக வலைதளங்களில் பதிவிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
வெங்கடேசன் என்பவர் தனது பிறந்த நாளை, அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் நண்பர்களுடன் கொண்டாடினார்.
பட்டாக்கத்தியால் வெங்கடேசன் கேக் வெட்டும் வீடியோ சமூகலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து, வெங்கடேசன், பால்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.