பறையிசைத்து மஞ்சப்பை விழிப்புணர்வு ..மாணவனுக்கு வெகுமதி அளித்த மூதாட்டி

Update: 2023-05-18 01:53 GMT

திருவாரூரில் பறையிசைத்து மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களுக்கு ஆதரவற்ற மூதாட்டி வெகுமதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெகிழி ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை அரசுடன் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் பறையிசைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களுக்கு ஆதரவற்ற மூதாட்டி வெகுமதி அளித்தார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்