"தொலைச்சி கட்டிருவேன்".. நள்ளிரவில் எச்சரித்த அமைச்சர்.. நடுங்கிய போலீஸ் - தீயாய் பரவும் வீடியோ

Update: 2023-05-21 03:34 GMT

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் நள்ளிரவில் திடீரென சோதனை மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், கனரக வாகனங்கள் செல்வதைப் பார்த்து பணியில் இருந்த காவலர்களை கண்டித்தார்.

தமிழகத்தில் இருந்து தினமும் இரவு ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றப்பட்டு குமரி மாவட்ட சோதனை சாவடி வழியாக கடந்து செல்வதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், நள்ளிரவு களியக்காவிளை சோதனை சாவடியில் அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த சோதனை சாவடியை கடந்து 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்றதை கண்ட அமைச்சர், பணியில் இருந்த காவலர்களை, தொலைத்து கட்டிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, அமைச்சரின் ஆய்வு குறித்த தகவல் பரவியதால், பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு, காலையில் சாரை சாரையாக சென்றன. இதனிடையே, அமைச்சர் ஆய்வு செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்