நபரின் காலுக்குள் இருந்து வந்த கஞ்சா.. "ஹேய் எப்புடுறா".. அதிர்ந்துபோன போலீசார்

Update: 2022-11-28 03:34 GMT

கேரளாவில் காலில் செல்லோடேப் ஒட்டி போதை பொருளை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். மலப்புரம் மாவட்டம் பண்டிக்காடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, வந்த ஒரு காரினை போலீசார் சோதனை செய்யும் போது காரில் போதை பொருள்கள் ஏதும் சிக்கவில்லை. ஆனால், காரில் இருந்த 2 பேர் மீதும் ஏற்கனவே பல கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவர்களிடத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, உம்மர் ஃபரூக் என்பவர் காலில்

செல்லோடேப் மூலம் கஞ்சாவை ஒட்டி கடத்தி முயன்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து உமர் ஃபரூக் மற்றும் ஷமீலை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்