லஞ்சம் தர மறுத்த ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய வனத்துறை ஊழியர்கள்.. - அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

Update: 2023-07-25 05:42 GMT

லஞ்சம் தர மறுத்த ஓட்டுநரை தாக்கிய வனவர் தீபக்குமார் வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட்செய்து சத்தியமங்கலம் வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பண்ணாரி வன சோதனை சாவடியில் லஞ்சம் தர மறுத்ததாக கர்நாடகாவை சேர்ந்த ஓட்டுனரை

வனத்துறை ஊழியர்கள் தீபக்குமார் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ வெளியான நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்