2 மகள்களுடன் சிக்னலில் நின்றிருந்த தந்தை.. திடீரென வந்த கண்டெய்னர் லாரி.

Update: 2022-09-15 05:28 GMT

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு பள்ளி மாணவிகள் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது இருசக்கர வாகனம் மீது வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாதி மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஜெயஸ்ரீ மற்றும் வர்ஷா ஸ்ரீ ஆகியோர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இவர்களது தந்தையான தண்டபாணி படுகாயம் அடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்