அரசுப் பேருந்தை வழிமறித்த "படையப்பா" யானை... திடீரென பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் பதற்றம்

Update: 2023-04-02 16:26 GMT

கேரள மாநிலம் மூணாறில் படையப்பா காட்டு யானை மீண்டும் அரசுப் பேருந்தை வழிமறித்ததால் பதற்றம் ஏற்பட்டது... மறையூர் பகுதியிலுள்ள கன்னிமலை எஸ்டேட் பகுதியில் இறங்கிய படையப்பா யானை அங்குள்ள சாலையில் இறங்கி மூணாறிலிருந்து உடுமலைப்பேட்டைக்கு சென்ற கேரள அரசு பேருந்தை வழிமறுத்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். இருப்பினும் படையப்பா சிறிது நேரம் பேருந்தை வழி மறித்து நின்றுவிட்டு திரும்பி சென்றதால் பயணிகள் நிம்மதியடைந்தனர். அதிகாலை வேளையில் இவ்வழியாக வரும் காய்கறி வாகனங்களை வழி மறித்து படையப்பா சாப்பிட உணவு தேடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்