ஆட்டுடன் ரீல்ஸ் எடுப்பதாக கூறி ஆட்டையை போட்ட The Boys

Update: 2023-07-16 02:11 GMT

செல்ஃபி எடுப்பதாக கூறிவிட்டு, ஆட்டை கடத்தி சென்ற 5 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி ஒரே ஆட்டோவில் 5 நண்பர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் ஆட்டுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதாக கூறிவிட்டு, ஆட்டை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விரைந்துள்ளனர். இவர்களை அப்பகுதி இளைஞர்கள் விரட்டி பிடித்த காவல்துறையில் ஒப்படைத்தனர். அவர்களிடம் கஞ்சாவும் இருந்த நிலையில் 5 பேரும் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்