ஐதரபாத்தில் பிடிபட்ட மூன்று பயங்கரவாதிகள் விசாரணையில் வெளியான பயங்கர சதித்திட்டம்!

Update: 2022-10-03 08:33 GMT

ஐதரபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சிலர் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து உளவுத்துறை போலீசார் அப்துல் ஜாகித் என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டுகளை வீசி உயிர்சேதம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து அப்துல் ஜாகித், முகமது சமீருத்தீன் மற்றும் மாஸ் ஹசன் பரூக் ஆகியோரை உளவுத்துறை போலீசார் கைது செய்தனர். இதில் அப்துல் ஜாகித்திற்கு லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பு இருப்பதும், பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. கைதானவர்களிடம் இருந்து 4 கையெறி குண்டுகள், 5 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்