படகுகளை எடுத்துவர விமானத்தில் இலங்கைக்கு சென்ற தமிழக மீனவர்கள்

Update: 2023-01-27 04:01 GMT

இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த படகுகளை நீதிமன்றம் மூலம் மீட்க, தமிழக மீனவர்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றனர்.

இது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க பொறுப்பாளர் ஜேசுராஜா தலைமையில், எட்டு பேர், புதுக்கோட்டை மீனவர்கள் இருவர் என, 10 பேர் சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றனர்.

தமிழக மீனவர்களின் படகுகள் சம்பந்தப்பட்ட வழக்குகள், இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகி படகுகள் மீட்கப்படும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்