திடீரென கோயிலில் கதறி அழுத மூதாட்டி.. பக்தர்களுக்கு போலீஸ் போட்ட சோதனை- திருச்சியில் பரபரப்பு

Update: 2023-07-02 13:38 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அகஸ்தீவரர் கோவிலுக்கு சென்ற, வேலாயி என்ற மூதாட்டி, 4 சவரன் தங்க சங்கிலியை காணவில்லை என கதறி அழுதார். பின்பு தகவலறிந்து சென்ற போலீசார், கோவிலில் இருந்த பக்தர்களை வரிசையாக நிறுத்தி சோதனை செய்து வெளியே அனுப்பினர். இருப்பினும் தங்க சங்கிலியை திருடியவர்களை கண்டறிய முடியாததால், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்