சின்னத்திரை நடிகை மீது சினேகன் பரபரப்பு புகார்.
பாடலாசிரியரும் மக்கள் நீதி மைய கட்சியினுடைய நிர்வாகியுமான சினேகன் நடத்தி வரும் அறக்கட்டளையின் பெயரில் போலியாக அறக்கட்டளை நிறுவனம் தொடங்கி பண வசூல் செய்து வருவதாக பிஜேபி நிர்வாகியும் துணை நடிகையுமான ஜெயலட்சுமி மீது பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்