பெண்ணின் அலறல் சத்தம்.. சென்னை சென்ட்ரலில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2022-11-29 07:54 GMT

சென்னை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி வட மாநில இளைஞர் ஒருவரை பொது மக்கள் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் திருவள்ளூர் நோக்கி புறப்பட ரயில் தயராகியுள்ளது. அப்போது, ரயிலில் ஏறிய வட மாநில இளைஞர் ஒருவர், பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதில், அந்த பெண் கூச்சலிடவே ரயிலில் இருந்தவர்கள், வட மாநில இளைஞரை சரமாரியாக தாக்கி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வட மாநில இளைஞரால் வாய் பேச முடியாது என்பதும், அவர் போதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்