முதல் ரேங்க் போட்டியில் விஷம் கொடுத்து பள்ளி மாணவன் கொடூர கொலை - மருத்துவமனையை நொறுக்கிய உறவினர்கள்

Update: 2022-09-04 08:30 GMT

காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மகன் பால மணிகண்டன், 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது வாந்தி மயக்கம் எடுத்த‌தால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பள்ளியில் விசாரித்த போது, மாணவர் பயிலும் வகுப்பை சேர்ந்த சக மாணவியின் தாயார் சகாய ராணி விக்டோரியா குளிர்பானம் கொடுத்த‌து தெரிய வந்த‌து.

இதையடுத்து, படிப்பில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்த‌தாக மாணவனின் தாயார் மாலதி அளித்த புகாரின் அடிப்படையில் விக்டோரியாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால மணிகண்டன், உயிரிழந்தார்.

இதையடுத்து உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, மருத்துவமனை மீது உறவினர்கள் தாக்குதல் நடத்தி ஜன்னல் கண்ணாடிகளை சுக்குநூறாக உடைத்தனர்.

இதனால் போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்