ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையான ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதி
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெயக்குமார் மூச்சுத்திணறல் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் ஜெயக்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.