நடு ரோட்டில் வைத்து ஆட்டோ ஓட்டுனரை சரமாரி தாக்கிய காவலர் - அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

Update: 2023-06-01 02:47 GMT

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ மோதி அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் காவலர் கோபத்துடன் ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கினார். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில் உடனடியாக காவலரை பணியிடை நீக்கம் செய்து மாண்டியா காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்