நாளை பிரதமர் மோடிசென்னை வருகை - 22,000 காவலர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு

Update: 2023-04-07 02:06 GMT

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் 8- ந் தேதி நாளை பகல் 2.45 மணிக்கு சென்னை வர உள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ். சென்று பின்னர் காரில் சென்ட்​ரல் ரெயில் நிலையம், ராமகிருஷ்ணா மடம் ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு பல்லாவரம் வருகிறார். அங்கு விமான நிலைய திறப்பு விழா மற்றும் நல திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்கிறார். இரவு 8.45 மணிக்கு சென்னையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மைசூர் செல்கிறார். இதற்காக சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம், புதிய முனையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை கீழ் வந்து உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்